"செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டுள்ளது"

67பார்த்தது
"செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டுள்ளது"
ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்களின் முதலீடு, வருமானம், சேவை அளவு ஆகியவற்றில் மாறுபாடு உள்ளது. ஆனால், கட்டண உயர்வை மட்டும் 3 நிறுவனங்களும் 15% முதல் 20% வரை உயர்த்தி ஒரே மாதிரி அறிவித்தது எப்படி? நாட்டில் 92% சேவை வழங்கும் 3 நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது எப்படி? இதன்மூலம் செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டுள்ளது தெரிகிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.
Job Suitcase

Jobs near you