நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

98758பார்த்தது
நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (06.12.2023) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (04.12.2023) இன்றும் (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி