பாலினத்தை கண்டறிந்த கும்பலை கண்டித்த மருத்துவ இணை இயக்குனர்

77பார்த்தது
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கும்பலை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி கையும், களவுமாக பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆளில்லாத வீட்டில் வைத்து பரிசோதனை செய்த இந்த கும்பல் தலா ரூ.13,000 வீதம் பெற்றுக் கொண்டு 4 பெண்களுக்கு நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தியது அம்பலமாகியுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன், நடராஜன், சின்னராஜ் மற்றும் லதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: சன் நியூஸ்.

தொடர்புடைய செய்தி