தாய் கண்முன்னே குழந்தை மீது ஏறிய கார் (வீடியோ)

52பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் முன் ஒரு பெண் தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக திரும்பியபோது குழந்தை மீது ஏறியது. இந்த விபத்தில் தாயின் கண் முன்னே குழந்தை கார் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கியது. பலத்த காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி