"மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்தக் கூடாது"

73பார்த்தது
"மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்தக் கூடாது"
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை அப்புறப்படுத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்த பின் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம், "மாஞ்சோலை தொழிலாளர்களின் விருப்ப ஓய்வை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. இதே பகுதியில் அவர்கள் வாழ வழிசெய்ய வேண்டும். இங்கேயே அவர்கள் பணி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் எடுத்து நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி