ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

81பார்த்தது
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!
ஜியோ மொபைல் கட்டணம் ஜூலை 3ஆம் தேதி முதல் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, பல ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வரும் நிலையில், ஜியோவின் பிரபலமான பிளான்களான ரூ.395, ரூ.1,559 ப்ரீபெய்ட் திட்டங்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. ரூ.395 திட்டம் 84 நாட்கள் சேவையையும், ரூ.1,559 திட்டம் 336 நாட்களுக்கான சேவையையும் வழங்கி வந்தது. இந்த திட்டங்கள் பேசிக் மாடல் ஃபோன் வைத்திருப்பவர்களிடம் மிகவும் பிரபலமானவை. இந்த திட்டத்தை ஜியோ நீக்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி