புட்டுத் திருவிழா: மதுரை வந்தார் முருகப்பெருமான்

59பார்த்தது
புட்டுத் திருவிழா: மதுரை வந்தார் முருகப்பெருமான்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று (செப்.,12) வந்தடைந்தார்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி புட்டு திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அரிமர்த்தன பாண்டியனாக இன்று (செப்.,12) காலை திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை புரிந்தார்.

நேற்று (செப்.,11) மாலை திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். நாளை (செப்.,13) நடைபெறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி