மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மைக் செட் ஆபரேட்டர், மின் கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வரும்போது வரும் வழியில் உயிர் இழந்தார். இது குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்