கரூர் மாவட்டம் குளித்தலை எலிமெண்டரி ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் முருகையா (50). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற முருகையா மீது நேற்று வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.