பெட்டிக்கடை பின்புறம் மது விற்றவர் கைது

56பார்த்தது
பெட்டிக்கடை பின்புறம் மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் குப்பண்ணா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தாரா கவுண்டர் மகன் சுந்தரம் என்கிற பொன்னுசாமி (54). இவர் எஸ். வளையப்பட்டி பகுதியில் தனது பெட்டி கடை பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மதுவிற்ற சுந்தரம் என்கிற பொன்னுசாமி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி