பொதுப் பாதை நடுவே சின்டெக்ஸ் டேங்க் தொட்டி- தடுக்க கோரிக்கை.

62பார்த்தது
பொதுப் பாதை நடுவே சின்டெக்ஸ் டேங்க் தொட்டி- தடுக்க கோரிக்கை.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் பொதுப் பாதை நடுவே சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைக்கும் பணியை நிறுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஷா நகர் இரண்டாவது கிராஸ் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

பள்ளப்பட்டி நகராட்சி சார்பில் 6 அடி பொதுப் பாதை நடுவே ஆக்கிரமிப்பு செய்து, சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைக்கப்பட்டு பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்து சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைத்துள்ளதால், நடந்து செல்வதற்கு பாதை இல்லை எனவும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுதான் முக்கிய வழி எனவும், இதனால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், உடனடியாக குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில், இதுவரை சின்டெக்ஸ் தொட்டி அகற்றப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் அளித்த பேட்டி இதோ உங்கள் பார்வைக்காக.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி