குமரி -இரண்டாம் திருமணம் செய்த போலீஸ் கைது

2192பார்த்தது
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் 50, வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி, ஆஸ்மி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். ஆஸ்மி எம். காம் படித்து முடித்து விட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

வேலைக்கு சென்று வந்தபோது மார்த்தாண்டம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ் ராஜேஷ் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ராஜேஷ் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் ராஜேஷ் முதல் திருமணத்தை மறைத்து ஆஸ்மியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு மாலை இவர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர் என பெண் வீட்டார் தெரிந்து கொண்டதை அடுத்து அவரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்-ஐ சிறையில் அடைத்தனர்.