ஆந்திராவில் இருந்து குமரி வந்த 2, 600 டன் ரேஷன் அரிசி.

66பார்த்தது
குமரி மாவட்ட பொதுவினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆந்திராவில் இருந்து 2, 600 டன் ரேஷன் அரிசி மூடைகள் ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சரக்கு ரெயிலில் 45 வேகன்களில் இந்த அரிசி மூடைகள் வந்துள்ளது. பின்னர் அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக அரிசி மூடைகளை ஏற்றுவதற்காக ரெயில்வே ரோட்டில் ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி