இரணியல் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

8009பார்த்தது
இரணியல் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கப்பியறையை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் ஜோயல்(24). இவர் நேற்று நாகர்கோவிலிலிருந்து தோட்டியோடு கார் கம்பெனி பக்கம் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வரும் போது எதிரே வந்த சென்னை செல்லும் தனியாஸ் ஆம்னி எதிர்ப்பாராமல் மோதியது.

இதில் வாகனத்துடன் கிழே விழுந்ததில் ஜோயலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிட்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி