குமரி: கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்க முயன்ற இருவர் பலி

7446பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே லெட்சுமி புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (55). செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீ லிங்கத்தின் மகன் இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் அருகில் உள்ள சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் அருகில் வைத்து விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் இருசக்கர வாகனம் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

இதனை கிணற்றிலிருந்து வெளியே எடுக்க வேண்டி பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வன் (35) (இவருக்கு திருமணம் ஆகவில்லை) என்பவரை அழைத்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தேடும்போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டதில் மூச்சுத் திணறி நீருக்குள் தத்தளித்து இருவரும் மூழ்கி விட்டனர். பின்னர் அஞ்சு கிராமம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் சடலத்தை வெளியே எடுத்தனர்.

தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் இருவர் இறந்தது அந்தப் பகுதியும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி