உத்திரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் காதலன் ஒருவர் தனது காதலியை அழைத்துக்கொண்டு தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் விடுதி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.