லாரி டிரைவர் தலையில் கல்லை போட்டு கொன்ற ஆட்டோ டிரைவர்

2264பார்த்தது
லாரி டிரைவர் தலையில் கல்லை போட்டு கொன்ற ஆட்டோ டிரைவர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர், பதுவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் 'பாம்' வினோத் (37), இவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாம் வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

இவரும் செங்கல்பட்டு அடுத்த குருவன்மேடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (50) என்பவரும் அகரம் தென் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது குடித்து விட்டு போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது குமார் தலையில் கல்லை போட்டு விட்டு பாம் வினோத் தப்பி சென்று விட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேலையூர் போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளி வினோத்தை தனிப்படை அமைத்து தேடினர்.

இந்நிலையில் நேற்று காலை ஆவடி அருகே தனிப்படை போலீசார் வினோத்தை கைது செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you