காஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் நுால் வெளியீட்டு விழா

73பார்த்தது
காஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் நுால் வெளியீட்டு விழா
காஞ்சிபுரம் அருங்காட்சியகம், காஞ்சி இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் செல்வராசன் எழுதிய தம் ஊழே தமிழ்' என்ற நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

சித்த மருத்துவர் ஜோதி பிரகாசம் வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய கண்காணிப்பாளர் திருமால்ராஜ் தலைமை வகித்தார்.

முனைவர் ஜவஹர் பாபு முன்னிலை வகித்தார். நுாலின் முதல் பிரதியை காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் வெளியிட, சங்கரா கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார்.

காஞ்சி இலக்கிய வட்டம் காஞ்சி இளம் கவி, பேராசிரியர்கள் கணபதி, அப்பாதுரை வாழ்த்துரை வழங்கினர். நுாலாசிரியர் கவிஞர் செல்வராசன் ஏற்புரை நிகழ்த்தினார்.
Job Suitcase

Jobs near you