மின்சாரம் பாய்ந்து ஹோட்டல் ஊழியர் பலி

50பார்த்தது
மின்சாரம் பாய்ந்து ஹோட்டல் ஊழியர் பலி
நேபாளம்நாட்டைச் சேர்ந்தவர் டெம்பிள் சுனர், 25. இவர், முடிச்சூர், லட்சுமி நகரில் தங்கி, அங்குள்ள 'ரோலக்ஸ்' ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர்.

அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி