பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது -ஜோதிமணி

71பார்த்தது
*"பாஜகவால் தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று கரூர் எம்பி ஜோதிமணி கருத்து. "*

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கரூர் எம்பி ஜோதிமணி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்.


தமிழ்நாட்டைப் பொறுத்த வரையும் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது.

பாஜக எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார்கள் ஆனால் ஒரு போதும் தமிழ்நாட்டு மண்ணில் காலூன்ற முடியாது

இந்தியா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்

நரேந்திர மோடிக்கும் பாஜகவிற்கும் எதிரான வாக்காக தான் உள்ளது.

உண்மையான ஜனநாயகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி பிரதமரே நான்கு ரவுண்டில் பின்னடைவை சந்தித்து வேலையில் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரக் கூடாது அது தான் நியாயம் இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்யும் என்றார்.

*இடம் - விமான நிலையம் சென்னை*