பச்சைப் பட்டில் கள்ளழகர்.. வைகையில் குவிந்த பக்தர்கள்..

586பார்த்தது
பச்சைப் பட்டில் கள்ளழகர்.. வைகையில் குவிந்த பக்தர்கள்..
மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் முடிந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. பச்சைப் பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் கள்ளழகர், வைகை ஆற்றை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். அங்கு பக்தர்களுக்கு அருள் தந்தபடி இன்னும் சற்று நேரத்தில் ஆற்றில் இறங்கவுள்ளார். இந்த நிகழ்வைக் கண்டு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என கூறி பரவசமடைந்து வருகின்றனர்.