யூடியுபர் இர்பான் மீது சீறிய ஜெயக்குமார்

55பார்த்தது
பிரபல யூடியூபர் இர்பான் சமீபத்தில் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டார். இது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது புகார்கள் பாய்ந்தன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மே 24) கூறுகையில், “இர்பான் ஒரு பிரபல யூடியூபர் மற்றும் உதயநிதிக்கு நெருங்கியவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஆனால், சாமானிய மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருந்தால் கைது, ஜெயில், குண்டாஸ் என வழக்கு மேல் வழக்கு போட்டு இருப்பார்கள்” என விமர்சித்து பேசியுள்ளார்.

நன்றி: பாலிமர்