ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்தம்

74870பார்த்தது
ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்தம்
அவனியாபுரத்தில் இன்று காலை முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் போட்டியில் கலந்துகொண்ட காளைக்கு காயம் ஏற்பட்டு களத்தில் அமர்ந்ததால் ஜல்லிக்கட்டுப் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காளைக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் கால்நடை மருத்துவர்கள் முதலுதவி அளித்து வருகின்றனர். கால்நடை ஆம்புலன்ஸில் காளையை ஏற்றும் வரை ஜல்லிக்கட்டுப் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி