புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ. 1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.73 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.