தென்னாப்பிரிக்கா அணியை விமர்சித்த இம்ரான் தாஹிர்

2534பார்த்தது
தென்னாப்பிரிக்கா அணியை விமர்சித்த இம்ரான் தாஹிர்
தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் நேற்றைய ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து, அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "நீங்கள் குழந்தையை போல விளையாடி இருக்கிறீர்கள். 40,000 பேர் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா அணி சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. உங்களுக்கு 4 வருட ஒப்பந்தத்தில் பயிற்சியாளர்கள் இருந்தும் இப்படி செயல்பட்டது சரி இல்லை" என்று விளாசியுள்ளார். அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய அந்த அணி, தோல்வி அடைந்தது. உலக கோப்பையை எதிர்பார்த்து காத்திருந்த தென்னாப்பிரிக்கா நாட்டு ரசிகர்களுக்கு இது வேதனையை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி