டி20 உலகக் கோப்பை தொடருக்கான கனவு அணியை தேர்வு செய்து ஐசிசி அறிவித்துள்ளது. ரோஹித் ஷர்மா ஐசிசி கனவு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியை சேர்ந்த சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஹர்திக், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷீத் கான், பசல் பரூக்கியும், வெஸ்ட் இண்டிஸ் அணியின் நிக்கலஸ் பூரான், ஆஸ்திரேலியாவின் ஸ்டாய்னிஸ்-ம் இடம்பிடித்துள்ளனர்.