உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகிறது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதை செய்து கொண்டிருக்கிறார்கள். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தமிழ்நாடு ஃபுட் சேப்டி கன்ஸ்யூமர்(Tamil Nadu Food Safety Consumer) என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் புகார் அளிக்க உணவு பாதுகாப்புத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.