அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள மரியெட்டா நகரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லிண்டா லெக்சஸ் என்ற பெண்ணுக்கு எச்ஐவி ஜனவரி 1, 2022-ல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் 211 பேருடன் உடலுறவு கொண்டுள்ளார். பாலியல் தொழிலாளியாக பணிபுரியும் பெண், கடந்த மே 13 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் உடலுறவு கொண்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.