சென்னை பெருங்குடியை வெள்ளக்காடாக மாற்றிய கனமழை

63பார்த்தது
சென்னையில் இன்று (அக்., 15) கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றிரவு விடிய விடிய மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் வேளச்சேரி, அடையாறு, பெருங்குடி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளிலும், மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பெருங்குடியில் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு மழை வெள்ளம் சாலைகளில் தேங்கியுள்ளது. இதன் வீடியோவை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.