டெல்லியில் கனமழை.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு

59பார்த்தது
கனமழையால் தலைநகர் டெல்லியில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சனிக்கிழமையன்று இடைவிடாது பெய்த மழையால் வெவ்வேறு சம்பவங்களில் ஒரு முதியவர், ஒரு இளைஞர் மற்றும் நான்கு குழந்தைகள் இறந்தனர். இதன் மூலம் டெல்லியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி செங்கோட்டையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே, மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி