5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

58பார்த்தது
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 24) தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.