ஹீட் ஸ்ட்ரோக் - சிறப்பு வார்டுகள் அமைப்பு

55பார்த்தது
ஹீட் ஸ்ட்ரோக் - சிறப்பு வார்டுகள் அமைப்பு
தமிழகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கான பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி