சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு

57பார்த்தது
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு
கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனியில் தனியார் விடுதியில் வைத்து சவுக்கு சங்கரை இன்று கோவை காவல்துறை கைது செய்தது. அப்போது சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.