பட்டாசு ஆலை வெடி விபத்து: பழனிசாமி கண்டனம்!

62பார்த்தது
பட்டாசு ஆலை வெடி விபத்து: பழனிசாமி கண்டனம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாததால் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் வெடிவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தும் இதுவரை பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யாத அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி