தந்தை மகன் குத்திக்கொலை.. அதிர்ச்சி வீடியோ

77870பார்த்தது
டெல்லியின் சிராக் நகரில் குமார் சவுக் பகுதியில் வசித்து வந்தவர் ஜெய் பகவான் (வயது 55). இவருடைய மகன் சுபம் (வயது 22). இருவரும் கேபிள் பணியாளர்களாக இருந்து வந்தனர். இவர்களின் அண்டை வீட்டாருக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் நடந்த சன்டையில், ஜெய் பவகான் மற்றும் அவருடைய மகன் இருவரையும் 4 முதல் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி