டி.என். பாளையம் வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடியவர் கைது

6475பார்த்தது
டி என் பாளையம் வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடியவர் கைது

டி.என். பாளையம் கொங்கர் பாளையம் அருகே உள்ள வெள்ளை கருப்பகுதியில் உடும்பு இறைச்சி வைத்திருப்பதாக டி.என். பாளையம் வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது ஒரு வீட்டில் குத்தியாலத்தூர் பத்திரிகை படுகையைச் சேர்ந்த வெள்ளையன் மகன் சடையப்பன் வயது 37 காட்டில் வேட்டையாடிய உடம்பின் இறைச்சியை வைத்திருப்பதாக தெரியவந்தது.

இது குறித்து சடையப்பனிடம் நடத்திய விசாரணையில், அவர் கொங்கர் பாளையம், வெள்ளக்காடு வனப்பகுதியில் கன்னி வைத்து சிறிய உடும்பை வேட்டையாடி வீட்டுக்கு எடுத்து வந்து சமைப்பதற்காக வெட்டி வைத்திருந்தது ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து சுமார் 1/4 கிலோ உடும்பு இறைச்சியை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட சிறிய கண்ணிகள் 4 முயல் கன்னிகள் மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் வளர்ப்பு செய்து சடையப்பனை கைது செய்தனர்.

டேக்ஸ் :