அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்

577பார்த்தது
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்ற நேற்று சென்றது. இதனை ஓட்டுனர் துரைசாமி மற்றும் நடத்துனர் அருண்குமார் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த பேருந்தில் மதுபோதையில் ஏறிய இளைஞர் ஒருவர் பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியவாறு சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்‌.

இதனை அடுத்து சக பயணிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் மதுபோதையில் இருந்த இளைஞரை வேப்பம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த இளைஞர் அங்கு இருந்த கல்லால் அரசு பேருந்து பின்பக்க கண்ணாடி உடைத்துள்ளார். இதுகுறித்து ஓட்டுநர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்தது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பதும், அவர் பல்லடத்தில் கூலி வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. மதுபோதையில் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஆத்திரத்தில் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you