அதிமுக முகவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

75பார்த்தது
அதிமுக முகவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து முகவர்கள் வெளியேறிவிடக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நேற்று மே(29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேஜைகளுக்கு ஏற்றார்போல் வாக்கு எண்ணும் முகவர்களை அதிமுக நியமித்துள்ளது.அந்த முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற நாற்காலிகளில் முதலில் சென்று அமர்ந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்றவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எக்காரணம் கொண்டும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :