காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த எடப்பாடி

66பார்த்தது
காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த எடப்பாடி
திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 2) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திருப்பத்தூரில் உள்ள காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். தொடர்ந்து, அங்கு சாலையில் நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த பேருந்து நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் நோட்டீஸ் கொடுத்து தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.