ஒட்டன்சத்திரம் - Oddanchatram

ஒட்டன்சத்திரம்: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு

ஒட்டன்சத்திரம் அருகே பூலியூர்நத்தம் உட்பட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பூலியூர் நத்தம், செம்மடைப்பட்டி, சிந்தலைப்பட்டி, சீரங்க கவுண்டன்புதூர், மண்டவாடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றோம்.  நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றோம். எங்களுக்கு சொந்தமாக நிலமோ வீடோ இல்லை. நாங்கள் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். இதனால் மழைக்காலங்களில் ஓரே வீட்டில் இருக்க முடியவில்லை. ஆகையால் கலெக்டர் இது குறித்து விசாரணை செய்து, எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా