அதிகமாக மது குடித்த வாலிபர் உயிரிழப்பு

5720பார்த்தது
கொடைக்கானல் வட்டக்கானலில் அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் உயிரிழப்பு. ஆந்திரா மாநிலம் இந்துப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நரேந்திரா வயது 25. தனது நண்பர்கள் 10 பேருடன் புத்தாண்டை கொண்டாட கொடைக்கானல் வந்தனர். வட்டக்கானல் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அரை எடுத்து தங்கினார்கள். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்கு வந்த அவர்கள் ஒன்றாக மது குடித்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நரேந்திராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் தனது நண்பர்களை உதவிக்கு அழைத்த போது அவர்கள் அனைவரும் குடி போதையிலே இருந்ததால் விடுதி ஊழியர்களை உதவிக்கு அழைத்தார். பின்னர் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததே அவர் உயிரிழந்ததற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நரேந்திரா நண்பர்களிடமும் விடுதி ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி