கோபால்பட்டியில் திருச்சி சிவா பிரச்சாரம்!

2306பார்த்தது
திண்டுக்கல் மக்களவை தொகுதியின் இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெருமுனை பிரச்சாரத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:

எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கிற தேர்தல் இது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி யில், 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ரூ. 7. 75 லட்சம் கோடியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டதன் மூலம் ரூ. 4. 50 லட்சம் கோடியும் அரசுக்கு கிடைத்திருக்கிறது. இந்த பணம் முழுவதும் பெருமுதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி யாக வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல, நாடாளுமன்றத்தில் பணக்கா ரர்களுக்கு ஆதரவான சட்டங்கள் மட்டுமே இயற்றப்பட்டன. மத, இன, மொழி வேறுபாடின்றி - நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கான சூழலை அரசின் மூலமாகவே ஏற்படுத்த முடியும். உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பணக்காரன், ஏழை என்ற இருவேறு நிலை பாடு பின்பற்றப்படுவதுண்டு.
ஆனால், வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்கும்போது அனைவரும் சமம். அரசியல் சட்டம் தந்திருக்கிற உரிமை என்ற வாக்குச் சீட்டுடன், அனைத்து மக்களும் கம்பீரமாக செல்ல வேண்டும்.

தொடர்புடைய செய்தி