ஆண் துணை இல்லாமல் தானாகவே கருவுறும் பாம்பு பற்றி தெரியுமா?

537பார்த்தது
ஆண் துணை இல்லாமல் தானாகவே கருவுறும் பாம்பு பற்றி தெரியுமா?
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் வகையைச் சேர்ந்தவை. இதில் பிளைண்ட் ஸ்னேக் என்றழைக்கப்படும் ஒரு வகை பாம்பு ஆண் துணை இல்லாமல் தானாகவே கருவடைகிறது. இந்த வகை பாம்புகளில் பெண் இனம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆப்பிரிக்கா ஆசியாவில் காணப்படும் இந்த பாம்பு தற்போது அந்தமான், இந்தியா உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகிறது. மண்புழு போலவே இதன் தோற்றம் இருப்பதால் இதை மண்புழு என்று நம்பி ஏமாறுபவர்களும் உண்டு.