தர்மபுரி: ஒகேனக்கல்லில் 500 கன அடியாக நீர்வரத்து சரிவு

84பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரி ஆறு. சமீப நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பொழியாததாலும், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்படாததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து காணப்படுகிறது. கடந்த வாரம் 1200 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து பிப்ரவரி 20 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 500 கனஅடியாக நீர்வரத்து வந்துகொண்டுள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி