குளிக்கச் சென்ற நபர் கிணற்றில் தவறி விழுந்து இறப்பு

579பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம. பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (65) என்பவர் குளிப்பதற்காக ம. பொடையூர் ஏரின் அருகில் உள்ள கிணற்றிற்கு சென்ற போது தவறி விழுந்து இறந்து விட்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ராமநத்தம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் சோகம் காணப்பட்டது.