தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று(மே 30) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு மற்றும் பிற பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு. சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு. ஸ்ரீகாந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.