வாக்கு எண்ணிக்கை- சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை!

78பார்த்தது
வாக்கு எண்ணிக்கை- சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை!
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். டிஜிபி சங்கர் ஜிவால் சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி