சத்தீஸ்கரில் புதிதாக 14,098 பேருக்கு கொரோனா!

1708பார்த்தது
சத்தீஸ்கரில் புதிதாக 14,098 பேருக்கு கொரோனா!
சத்தீஸ்கரில் கடந்த 24 மணிநேரத்தில் 14, 098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14, 098 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4, 32, 776 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கொரோனாவுக்கு மேலும் 97 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4, 777 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 85, 860 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 3, 42, 139 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. அதில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 82. 82 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.