மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் வலியுறுத்தல்..!

72பார்த்தது
மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் வலியுறுத்தல்..!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 முக்கிய மசோதாக்களை திரும்பப் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநர் ஆர். என். ரவியை முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலான ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தார். இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநரை அமைச்சர்கள் பலமுறை சந்தித்து வலியுறுத்தினர். ஆனாலும் அவர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர். என். ரவி நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆளுநருடனான சந்திப்பின் போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை அளித்தார். அந்தக் கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். எனவே, நிலுவையிலுள்ள மசோதாக்கள், கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நலன் கருதி அவற்றுக்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி