3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ள பிரதமர் மோடி, நாளை பகவதி அம்மனை தரிசிக்க உள்ளார். மேலும், கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.